இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யஷ்பால் சர்மா காலமானார்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவரான யஷ்பால் சர்மா இன்று மாரடைப்பால் காலமானார்.

இவர் 37 டெஸ்ட் போட்டிகளிலும், 42 ஒருநாள் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். டெஸ்ட் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1979 – 1983 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப்படுத்தியது இவரது கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்தது.

66 வயதாகும் யஷ்பால் சர்மாவுக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், காலை 7.15 மணியளவில் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இவரது மறைவுக்கு வீரர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version