சபரிமலையில் முதல்முறையாக பாதுகாப்பு பணிக்கு பெண் போலீசாரை நியமிக்க முடிவு

சபரிமலை சன்னிதானம் அருகே முதன் முறையாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் கடந்த மாத ஐப்பசி மாத பூஜையையொட்டி பெண்கள் சபரிமலைக்கு செல்ல முற்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறுகட்ட போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தின்போது வன்முறை நிகழ்ந்தது.

இந்தநிலையில், சித்திரை ஆட்ட திருநாளையொட்டி, இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. பதற்றமான சூழலால், வழக்கத்திற்கு மாறாக பிற்பகலுக்குப் பிறகே நிலக்கல்லில் இருந்து பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, முதல் முறையாக சன்னிதானத்தில் பெண் போலீசார் பாதுகாப்புக்காக நியமிக்க தீர்மானித்துள்ளனர். இன்று நடை திறக்கப்பட உள்ள நிலையில், சபரிமலையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுவதால், பம்பை, நிலக்கல், சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

Exit mobile version