மாநில நுகர்வோர் பாதுகாப்பு ஆணைய தலைவராக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் நியமனம்

மாநில நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் மறு உருவாக்கம் செய்யப்பட்டு அதன் தலைவராக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நுகர்வோர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக மாநில நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தை மறு உருவாக்கம் செய்து, தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன் படி உணவுத் துறை அமைச்சர் காமராஜ் ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு கீழ் உணவு, சுகாதாரம், போக்குவரத்து, தொழில் உள்ளிட்ட துறைகளின் முதன்மை செயலாளர்கள் உட்பட 14 மூத்த அதிகாரிகள் அதிகாரப்பூர்வ உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும்.

மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நுகர்வோர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்த ஆணையம் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Exit mobile version