நாகர்கோயில் அருகே பறக்கும் படையினர் சோதனையில் ரூ.34.8 லட்சம் பறிமுதல்

நாகர்கோயில் அருகே தேரேகால்புதூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 34 லட்சத்தை 8 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தேரேகால்புதூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த தனியார் ஆம்னி பேருந்தை சோதனை செய்த அதிகாரிகள், பேருந்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த அல்பீல்தீன் என்ற பயணி உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற 34 லட்சத்து 8 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

பயணி அல்பீல்தீனிடம் பறக்கும் படையினர் நடத்திய விசாரணையில் குளச்சலில் உள்ள உறவினரிடம் கொடுக்க சென்றது தெரியவந்தது. மேலும், இது ஹவாலா பணமா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகர்கோவில் மாவட்டத்தில் இதுவரை 5 ஆட்டோக்கள், 8 சொகுசு கார்கள், 46 லட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version