மு.க.ஸ்டாலின் தங்கும் விடுதியில் பறக்கும் படை சோதனை

தூத்துக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்கும் விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார். இந்நிலையில், அவர் தங்கி ஓய்வெடுக்கவுள்ள சத்யா ரிசார்ட்சில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

விடுதியின் உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்யும் வாகனங்கள், உடன் செல்லும் பாதுகாப்பு அதிகாரிகளின் வாகனங்கள், அவர் தங்கும் அறைகள் உள்ளிட்டவற்றிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Exit mobile version