காவிரி கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருச்சி மாவட்டம் காவிரி ஆற்றில் 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரி கொள்ளிடம் கரையோர மக்களுக்கு ஆட்சியர் சிவராசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். முக்கொம்பு அணையிலிருந்து காவிரி ஆற்றில் 35 ஆயிரம் கன அடியும், கொள்ளிட ஆற்றில் 10 ஆயிரம் கன அடியும் திறந்து விடப்பட்டுள்ளது. இதனையடுத்து கரையோர மக்கள் ஆறுகளை கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம் என ஆட்சியர் சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version