யமுனை நதியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

யமுனை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்வதால், டெல்லியில் வெள்ள ஆபத்து ஏற்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் பெய்து வரும் கன மழையால் டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்திர பிரதேசம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், கங்கை, யமுனை நதிகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனையடுத்து கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் வட மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்துள்ளது. டெல்லியில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

Exit mobile version