பயணிகள் விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப்போவதாக மிரட்டல்

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்த போவதாக வந்த மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப் போவதாக வந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் உள்நாட்டு விமான போக்குவரத்து பாதுகாப்பு முகமை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதனடிப்படையில் மதுரை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பயணிகள் பார்வையாளர்கள் அவர்கள் வரும் வாகனங்கள் உரிய பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுன்றன. ஆயூதமேந்திய பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் விமான நிலையம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Exit mobile version