ராமநாதபுரத்தில் இருந்து விமான சேவை விரைவில் தொடங்கப்படும் !

நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பான விவாதத்தில் ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக எழுத்து பூர்வமாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே சிங், ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு உடான் திட்டத்தின் கீழ் விமானத்தை இயக்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும், இத்திட்டம் அறிவிக்கப்பட்ட 180 நாட்களுக்குள் அல்லது விமான நிலையம் தயாராகி 2 மாதத்திற்குள் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய இணை அமைச்சர் வி.கே சிங் தெரிவித்தார்.

Exit mobile version