நெல்லையில் கார்-பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பலி

நெல்லை மாவட்டம் பத்தமடையில் காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாபநாசத்திலிருந்து நெல்லை நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. பத்தமடை அருகே எதிரே வந்த காரின் மீது எதிரபாராத விதமாக மோதியதில் காரில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த மற்றொருவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Exit mobile version