திருவெறும்பூரில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது

திருச்சி திருவெறும்பூரில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்தவர் ரஜினி என்ற கருப்பையா. இவர் தன் நண்பன் மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னே வந்த மர்ம நபர்கள் இவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ரஜினி பலியானார். ரஞ்சித் வெட்டுக் காயங்களுடன் உயிர் தப்பினார்.

ரஜினியும், குருபாகரனும் நடத்தி வந்த மீன்பண்ணை தொழிலில் இழப்பு ஏற்பட்டது. இதனால், குருபாகரன் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த குருபாகரன், தன் கூட்டாளிகள் மூலம் ரஜினியை கொலை செய்துள்ளார். இது தொடர்பாக ஊரணியில் குருபாகரன் அவரது மனைவி உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடி வருகின்றனர். 

Exit mobile version