கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்

புயல் சின்னம் காரணமாக கடலுக்கு சென்ற நாட்டுப் படகு, விசைப் படகு மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடுக்கடலில் உள்ள மீனவர்கள் அருகில் உள்ள துறைமுகங்களில் கரை ஒதுங்கி பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தினார்.

 

Exit mobile version