விழுப்புரம் மாவட்டத்தில் மீனவர் குப்பத்தில் கோஷ்டி மோதல்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மீனவர் குப்பத்தில் நடந்த கோஷ்டி மோதலில் நால்வர் படுகாயமடைந்தனர்.

மரக்காணம் அருகே உள்ள கைப்பானி குப்பம் மீனவர் பகுதியில் ஏழுமலை என்பவருக்கும் மனோகரன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்தநிலையில், மனோகரனின் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு ஏழுமலையின் வீட்டில் புகுந்து பெண்கள் உள்ளிட்ட பலரையும் தாக்கி, பல லட்சம் மதிப்பிலான பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் நான்கு பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version