நானா படேகர் மீது முதல் தகவல் அறிக்கை

பாலிவுட் நடிகரும் இயக்குனருமான நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறியது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகரும் இயக்குனருமான நானா படேகர், மீது பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியர் புகார் கூறியிருந்தார். இது இந்திய திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்மையில் பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா அளித்த பேட்டியில், நடிகர் நானா படகேர் கடந்த 2008- ம் ஆண்டு ஹிந்தி படப்பிடிப்பின் போது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், பல நடிகைகளை அவர் வன்முறையுடன் கையாண்டதாகவும் இப்படிபட்டவர்களுடன் நடிக்கும் பெரிய நடிகர்கள், நடிகைகள், கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் நேற்று தனது வழக்கறிஞருடன் ஒஷிவாரா காவல் நிலையம் சென்ற தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர், உள்ளிட்ட 5 பேர் மீது எழுத்துபூர்வ புகார் மனு கொடுத்தார். இதனையடுத்து காவல் துறையினர் நானா படேகர் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

 

Exit mobile version