திருச்சியில் பழைய பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து

திருச்சியில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

புத்தூர் அரசு மருத்துவமனை அருகே வண்ணாரப்பேட்டை பகுதியில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் கிடங்கு ஒன்று உள்ளது. லிங்கம் அவரது சகோதரர் ராஜரத்தினம் என்பவருக்குச் சொந்தமான இந்த கிடங்கின் மேற்கூரை சிதைந்த நிலையில் இருந்தது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அப்பகுதியில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் தீப்பொறி பட்டு கிடங்கில் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது. மளமளவென பரவிய தீ கிடங்கு முழுவதையும் ஆக்கிரமித்தது.

தகவலறிந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.2 ஜேசிபி வாகனங்கள் வரவழைக்கப்பட்டு ஏரிந்த குப்பைகளுக்கு இடையே உள்ள தீப்பிழம்புகளை அப்புறப்படுத்தும் பணியும், மீத முள்ள பழைய குப்பைகள் மீது தீப்பரவாமல் இருக்கவும் தீயணைப்பு துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். தீயணைப்பு வாகனங்களுக்கு உதவியாக மாநகராட்சி சார்பில் 2 டேங்கர் லாரிகளும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. தீ காரணமாக வானில் பல அடி உயரத்துக்கு கரும்புகை எழுந்தது.

 

Exit mobile version