ஒடிசா மாநிலம் தித்லகர் பகுதியில் ஓடும் ரயிலின் எஞ்சினில் தீ : பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது

ஒடிசா மாநிலம் தித்லகர் பகுதியில், ஓடும் ரயிலின் எஞ்சினில் தீப்பிடித்ததையடுத்து, பயணிகள் அனைவரும் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர். பூரி பகத் கி கோத்தி என்ற சூப்பர் பாஸ்ட் ரயிலின் எஞ்சின் பகுதியில் தீப்பிடித்ததால் பெரும் புகைமூட்டம் காணப்பட்டது. ஹரிசங்கர் ரோடு அருகே நிறுத்தப்பட்ட ரயிலில் இருந்து பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.

இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ரயிலின் புகை அதிகரித்த வண்ணம் இருந்த நிலையில், சம்ப இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்

Exit mobile version