புதுச்சேரியில் நூற்றாண்டு பழமையான பஞ்சாலையில் தீவிபத்து

புதுச்சேரியில் நூற்றாண்டு பழமையான பஞ்சாலையில் ஏற்பட்ட தீயை, தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி அணைத்தனர்.

புதுச்சேரி முதலியார்பேட்டையில் இயங்கி வந்த ஏ.எப்.டி பஞ்சாலை தானே புயலின்போது ஏற்பட்ட பாதிப்பு காரணமாகவும், ஊழியர்களின் ஊதிய பிரச்சினை காரணமாகவும் கடந்த 3 ஆண்டுகளாக முழுமையாக இயக்கப்படவில்லை.

இந்நிலையில் பஞ்சாலையில் உள்ள ஏ யூனிட் ஸ்பின்னிங் பிரிவில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் திடீரென தீ பற்றி எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். தீவிபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version