தனியார் அட்டை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ

திருவாரூர் அருகே தனியாரின் அட்டை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

கும்மிடிப்பூண்டியை அடுத்துள்ள காரம்பேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான அட்டை பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் காகித கழிவுகளை மறுசுழற்சி செய்து அட்டை பெட்டியாக தயாரிக்கின்றனர். உயர்மின் அழுத்தத்தினால் மின்கசிவு ஏற்பட்டதால் ஏற்பட்ட தீ மளமளவென பரவியது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

Exit mobile version