தேனி அருகே மாட்டு தீவனத்திற்கு வைத்திருந்த வைக்கோல் படப்பில் தீ

தேனி அருகே மாட்டு தீவனத்திற்கு வைத்திருந்த வைக்கோல் படப்பில் தீ பிடித்ததில் 2 படப்புகள் முற்றிலும் தீயில் எரிந்து நாசமாயின.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள திம்மிநாயக்கன்பட்டியில் சாகுல் ஹமீது என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அங்கு மாட்டு தீவனத்திற்காக வைக்கோல் படப்பு வைத்திருந்தார். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக படப்பில் தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து அறிந்து தீயணைப்புதுறையினர் தீயை அணைப்பதற்குள்ளாக, தீ முற்றிலும் எரிந்து படப்புகள் சாம்பாலானது.

தீவன தட்டுபாட்டிற்கு கோடை காலங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வைக்கோல் படப்புகள் எரிந்தது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version