கோவில்பட்டியில் ஜவுளிக் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமனது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுரோட்டில் ஜவுளி கடை ஒன்று இயங்கி வருகிறது. 2 தளங்கள் கொண்ட கடையில் மேல் பகுதியில் திடீரென தீ பற்றி எரிவதை கண்ட பொதுமக்கள், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர் கடையின் ஷட்டர் திறக்க முடியாததால் ஜேசிபி இயந்திரம் கொண்டு ஷட்டர் உடைக்கப்பட்டது.
ஆனால் அதற்குள்ளாகவே இரண்டு தளங்களும் தீப்பற்றி எரிந்ததில், சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானது. இதனையடுத்து மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுத்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.