தென்காசியில் தனியார் துணிக்கடையில் தீ விபத்து

தென்காசி துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் துணிகள் எரிந்து நாசமடைந்துள்ளது.

தென்காசியில் அமைந்துள்ள தனியார் துணிக்கடையில் இன்று அதிகாலை தீ பற்றியது. 3 மாடிகளை கொண்ட இந்த நிறுவனத்தின் 3-வது மாடியில் ஏற்பட்ட தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியது. தகவலறிந்து செங்கோட்டை, தென்காசி, சுரண்டை, கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மின் கசிவின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் ஆடைகள் எரிந்து நாசமாகின. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version