வில்லிவாக்கத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் தீ விபத்து

சென்னை வில்லிவாக்கத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் தீ விபத்து…

8வது மாடியின் படிக்கட்டில் சேமித்து வைத்து இருந்த வேஸ்ட் பேப்பர் மற்றும் பொருட்கள் தீப்பற்றி எரிந்துள்ளது..

இதனால் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பில் தீப்பற்றி எரிவது குறித்து தகவல் அறிந்து வந்த வில்லிவாக்கம், ஜெஜெ நகர், செம்பியம் ஆகிய தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

அதிகாலையில் நடைப்பெற்ற இந்த தீ விபத்து குறித்து வில்லிவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Exit mobile version