விமான கண்காட்சியில் தீ விபத்து : 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசம்

பெங்களூரூவில் நடைபெற்றுவரும் ஏரோ இந்தியா விமான கண்காட்சியில் வாகன நிறுத்துமிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமான வாகனங்கள் எரிந்து நாசமாகின. கர்நாடகாவின் பெங்களூருவில் ஏரோஇந்தியா விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. 4ம் நாளான இன்று விமானப் படையின் பல்வேறு பிரிவுகளும் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கண்காட்சி நடைபெற்று வரும் பகுதியில் உள்ள வாகன நிறுத்துடமிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

வாணுயர எழும்பிய புகையால், அப்பகுதியே பூகை மூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. தீ விபத்தில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கார் மற்றும் இருசக்கர வாகனம் போன்றவை எரிந்து சேதமடைந்தன. தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Exit mobile version