திருச்சி அருகே தனியார் பெயின்ட் குடோனில் தீ விபத்து

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

திறுவெறும்பூரை அடுத்த காட்டூரில் தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் கடை மற்றும் குடோன் உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை இக்கடையில் மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது. மேலும் தீ கடை முழுவதும் வேகமாக பரவியதுதால், எலக்ட்ரிக் பொருட்கள் மற்று பெயிண்ட் வாளிகள் வெடிக்கத் தொடங்கின.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தினால் சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. மேலும் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Exit mobile version