மத்திய நிதித்துறை செயலர் ஹஸ்முக் ஆதியா வரும் 30-ம் தேதியுடன் ஓய்வு

மத்திய நிதித்துறை செயலரான ஹஸ்முக் ஆதியா வரும் 30-ம் தேதி ஓய்வு பெற உள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நிதித்துறை செயலர் ஹஸ்முக் ஆதியா வரும் 30-ம் தேதியன்று ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்தார்.

மத்திய நிதித்துறை அமைச்சகத்தில் கடந்த 4 ஆண்டாக பணிபுரிந்து வந்த ஹஸ்முக் ஆதியா, ஓய்வுக்கு பின்னர் வேறு பணியில் தொடர வேண்டும் என அரசு விரும்பியதாகவும், அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதன் பின்னர், அவர் யோகா, ஆன்மீக பணியில் ஈடுபடுவதுடன், அவரது மகனுக்காகவும் நேரத்தை செலவிட உள்ளதாக தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version