4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் மற்றும் சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில், தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அரவக்குறிச்சி தொகுதியில், 68 பேர் வேட்புமனு தாக்கல் செய்ததில், 5 பேர் வாபஸ் பெற்றதையடுத்து 63 பேர் போட்டியிடுகின்றனர்.

திருப்பரங்குன்றத்தில், 44 பேர் வேட்பு மனு அளித்து, 7 பேர் வேட்பு மனுவை திரும்ப பெற்றனர். இதனால், திருப்பரங்குன்றத்தில் 37 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சூலூர் தொகுதியில் 2 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், 4 பதிவு செய்யப்பட்ட கட்சிகள், 16 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 22 பேர் போட்டியிடுகின்றனர்.

ஓட்டப்பிடாரத்தில், 18 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்ததில், 3 பேர் வாபஸ் பெற்றதையடுத்து 15 பேர் களத்தில் உள்ளனர். 4 தொகுதிகளிலும் மொத்தமாக 137 பேர் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version