தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் நெற்கதிர்கள் மற்றும் மானாவாரி பயிர்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி சேதம் அடைந்தன. இந்நிலையில், பாதிப்புகள் குறித்து வருவாய் துறை அதிகாரிகளுக்கு பலமுறை தகவல்கள் தெரிவித்தும், ஆய்வு செய்து கணக்கெடுப்பு பணிகளை செய்யாமல் அலட்சியம் செய்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கிட வலியுறுத்தியும், காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Exit mobile version