பீர்க்கங்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் பீர்க்கங்காய்களை பயிரிட விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

செங்கம் அருகே முறையார் கிராமத்தில் பரவலாக பீர்க்கங்காய் சாகுபடி அதிகரித்து வருகிறது. குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே தேவைப்படுவதால் விவசாயிகள் இதை பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிக மகசூல் கிடைப்பதால், எளிதால் லாபம் ஈட்ட முடிவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பீர்க்கங்காயில் உள்ள சத்துக்களால் ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவை குறையும். பார்வை திறனை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version