எள் சாகுபடியில் நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி

தஞ்சை திருவையாறு பகுதிகளில் ஊடு பயிரான எள் சாகுபடியில் நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதிகளில் கோடை காலத்துக்கு ஏற்ப கரும்பு, வாழை ,நெல் சாகுபடியை தொடர்ந்து ஊடு பயிரான எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறைந்த அளவு நீரை கொண்டு சாகுபடி செய்யப்பட்டு வரும் எள், நல்ல விளைச்சல் அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், கோடைகாலத்தில் மாற்று விவசாய முறையில் ஊடுபயிராக பயிரிடப்பட்ட எள் மூலம் நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Exit mobile version