காவல்துறையினரின் கொடுமையால் விவசாயி தீக்குளிப்பு

காவல்துறையினர் கொடுமைப்படுத்துவதாக கூறி விவசாயி ஒருவர் காவல் நிலையத்தில் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் தண்ணீட்டி நாகராஜ். விவசாய கூலியான இவரை சில நாட்களுக்கு முன்பு வழக்கு ஒன்றுக்காக அழைத்து சென்ற காவலர்கள், வழக்குப்பதிவு செய்து பலமுறை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிங்கராயகொண்டா காவல்நிலையத்திற்கு வந்த நாகராஜ், காவலர்கள் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அனைத்த காவலர்கள், ஓங்கோல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆபத்தான நிலையில் தற்போது நாகராஜ் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Exit mobile version