தங்கையின் தகாத உறவால் கொலைகாரன்களான அண்ணன்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே கள்ளக் காதல் விவகாரத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

தங்கை கொண்ட தகாத உறவை பொறுத்துக்கொள்ள முடியாமல் கள்ளக்காதலனை அண்ணன் அடித்தே கொலை செய்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்டம் செவ்வூர் வடக்கு குடியிருப்பை சேர்ந்த 45 வயதான திருநாவுக்கரசு, தஞ்சாவூரில் குடும்பத்துடன் தங்கி ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார்.

இவருக்கு, அதே பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த காயத்திரி என்ற 20 வயது இளம் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக் காதல் விவகாரம் காயத்திரியின் அண்ணன் அஜித்திற்கு தெரியவர, அவர் காயத்திரியை சொந்த ஊரான செவ்வூர் கிராமத்திற்கு அழைந்து வந்து விட்டார்.

இந்நிலையில் கள்ளக்காதலியின் பிரிவால் கலங்கிப் போனார் திருநாவுக்கரசு, என்ன நடந்தாலும் எதிர் கொள்ளலாம் என்று பஸ் பிடித்து செவ்வூர் புறப்பட்டார்.

திருநாவுக்கரசு தனது தங்கையை தேடி வந்த தகவல் அறிந்து ஆத்திரம் அடைந்த அவரது அண்ணன் உறவுக் கார பையனை கூட்டிக் கொண்டு திருநாவுக்கரசிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கலகலப்பானது. இதில் அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து திருநாவுக்கரசுவை கண்மூடி தனமாக தாக்கினார்கள் காயத்திரியின் சகோதரர்கள்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக உயிர் இழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், திருநாவுக்கரசின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காயத்திரியின் சகோதரர்களான சச்சின் மற்றும் அஜித் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்த நிலையில் ராம நாதபுரம் மாவட்ட அமர்வு நீதிபதி முன்பு இருவரும் சரண் அடைந்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version