News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

யோவ்…மிலிட்டரி….! ரோஜா செடிக்கு மனுச உரமாயா போடுவ…?

Web Team by Web Team
August 12, 2021
in TopNews, க்ரைம், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
யோவ்…மிலிட்டரி….! ரோஜா செடிக்கு மனுச உரமாயா போடுவ…?
Share on FacebookShare on Twitter

திருப்பூர் அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து இரண்டு கொலைகள் செய்த முன்னாள் ராணுவ வீரர் ஒரு ஆண்டுகளுக்கு பிறகு போலீசில் வசமாக சிக்கியுள்ளார்.

 

இப்படியே பேசிக் கொண்டிருந்தால் அடித்து கொன்று தோட்டத்திற்கு உரமாக்கி விடுவேன் என கோபத்தில் பலரின் வார்த்தைகள் தடிப்பதுண்டு.

ஆனால் தன்னை எதிர்த்து பேசிய இருவரை அடித்து கொன்று உண்மையிலேயே தோட்டத்திற்கு உரமாக்கி உள்ளார் திருப்பூரை சேர்ந்த எக்ஸ் மிலிட்டரி மேன் ஒருவர்.

வெள்ளகோவில் சாலையில் நர்சரி பள்ளி நடத்தி வந்தவர் முன்னாள் ராணுவ வீரர் முத்துசாமி.

20 வருடங்களுக்கு முன் மனைவி பிரிந்து சென்று விட்ட நிலையில் 75 வயதான இவர், தனியே வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்த வேலுச்சாமி என்பவருக்கும் இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் வேலுச்சாமியை கல்லால் அடித்தே கொன்றுள்ளார் மிலிட்டரி.

பின் நிதானமாக தோட்டத்தில் வைத்து அவரது உடலை எரித்து எலும்புகளை மட்டும் தனியே பிரித்து அதனை நர்சரி கார்டனில் உள்ள ரோஜா செடிகளுக்கு உரமாக்கி உள்ளார்.

வேலுச்சாமி சிறிது மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் அவர் உறவினர்கள் பெரிதாக அவரை தேடவில்லை.

வேலூச்சாமி உரமாகி ஒரு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன் ரவி- அம்சவேணி என்ற தம்பதிகள் வேலுச்சாமியின் கார்டனுக்கு வேலைக்கு வந்துள்ளனர்.

தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றும் வேலைக்கு வந்தவர், முத்துசாமிக்கு விருந்து வைக்க தொடங்கியுள்ளார்.

விஷயம் அறிந்து தோட்டத்தில் அடுத்த பஞ்சாயத்து ஆரம்பமானது. ரவியும் முத்துச்சாமியும் கட்டிப் புரண்டனர்.

கள்ளக்காதலன் அடி வாங்குவதை அம்சவேணியின் இளகிய மனதால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இதையடுத்து முத்துச்சாமியுடன் சேர்ந்து கணவனை தாக்க தொடங்கினார்.

எதிரணி பலமானதால் எதிர்க்க முடியாமல் தள்ளாடிய ரவியை இருவரும் கட்டையால் அடித்து கொன்றனர்.

பின் வழக்கம் போல உடலை தோட்டத்தில் வைத்து எரியூட்டி உரம் தயாரித்துள்ளார் முத்துச்சாமி.

image

ரவி உரம் தயாரிக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் தோட்ட வேலைக்கு வந்த அம்சவேணி, தோட்டத்திற்கு எஜமானி ஆகியிருந்தார்.

இந்நிலையில் அங்கு வேலை செய்த பெண்களிடம் மிலிட்டரி ஏற்கனவே இருவரை கொண்டு புதைத்திருக்கிறார் பார்த்து நடந்து கொள்ளுங்கள் என்று மிரட்டியுள்ளார்.

அம்சவேணி உளறி கொட்டிய உர மேட்டர் ஊருக்குள் தீயாய் பரவியது.

தகவல் போலீசார் காதுக்கு வர அவர்கள் அம்சவேணி மற்றும் முத்துச்சாமியை பிடித்து தங்கள் பாணியில் சிறப்பு வகுப்பு எடுக்க இருவரும் உண்மையை ஒப்புக் கொண்டனர்.

இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மிரட்டலுக்கு கோபத்தில் சொல்லும் வார்த்தையை ஒருவர் உண்மையிலேயே நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: arrestedcrimeExtra Marital AffairMurdernewsjTiruppur
Previous Post

திமுக அரசின் மின் கட்டண கொள்ளையால் பொதுமக்கள் பெரிதும் கவலை

Next Post

நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்: வரி உயருமோ?

Related Posts

போடி அருகே போதை வஸ்துக்கள் பயன்படுத்திய 3 இளைஞர்கள் கைது!
தமிழ்நாடு

போடி அருகே போதை வஸ்துக்கள் பயன்படுத்திய 3 இளைஞர்கள் கைது!

January 26, 2023
பெண் ஐஏஎஸ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அட்டூழியம்..! துணை தாசில்தாரும் அவரது நண்பரும் கைது
இந்தியா

பெண் ஐஏஎஸ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அட்டூழியம்..! துணை தாசில்தாரும் அவரது நண்பரும் கைது

January 23, 2023
rajpath road to karthavya road
இந்தியா

காலனித்துவத்தை குறிக்கும் வகையிலுள்ள ’ராஜ்பாத் சாலை’ பெயர், ’கர்த்தவ்யா சாலை’ என மாற்றம்!

September 6, 2022
’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
அரசியல்

’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

September 5, 2022
Dead woman lying on the floor under white cloth with focus on hand
இந்தியா

ஆண் நண்பர்களுடன் பேசியதால் 5-ஆம் வகுப்பு மாணவி கொலை! பெற்றோர் அறங்கேற்றிய கொடுஞ்செயல்!

September 5, 2022
rishi sunak liz trous
அரசியல்

இங்கிலாந்தின் பிரதமர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு! அடுத்த பிரதமர் யார்?

September 5, 2022
Next Post
நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்: வரி உயருமோ?

நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்: வரி உயருமோ?

Discussion about this post

அண்மை செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல் : தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம்!

ஈரோடு இடைத்தேர்தல் : தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம்!

January 27, 2023
கே.எல். ராகுல் திருமணத்திற்கு தோனி கொடுத்தப் பரிசு!

கே.எல். ராகுல் திருமணத்திற்கு தோனி கொடுத்தப் பரிசு!

January 27, 2023
2022ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு!

2022ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு!

January 27, 2023
புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!

புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!

January 27, 2023
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது!

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது!

January 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist