வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு

வாக்காளர் அடையாள அட்டையில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் செய்வதற்கான கால அவகாசம் அக்டோபர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. வாக்காளர்கள் இந்த திருத்தங்களை இ-சேவை மையத்தை அணுகி மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், தற்போது அக்டோபர் 15-ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version