ஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத்தின் கால அளவு நீட்டிப்பு- தமிழக அரசு

ஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத்தின் கால அளவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி, 2017 ஜனவரி அன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் வன்முறை ஏற்பட்டது. இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் 2017 ஜனவரி மாதம் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடந்து வந்தது. இதற்கான 22 மாத கால அவகாசம் முடிவடைந்த நிலையில், மேலும் 3 மாதங்களுக்கு விசாரணை ஆணையத்தின் கால அளவை நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Exit mobile version