ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 4 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் நான்கு மாத காலம் அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை தமிழக அரசு கடந்த 2017ஆம் ஆண்டு அமைத்தது. இதனிடையே விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருவதால், கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என ஆணையம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், பிப்ரவரி 24ம் தேதியுடன் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்ததை தொடர்ந்து, தற்போது மேலும் நான்கு மாதத்திற்கு கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version