அரவக்குறிச்சி தொகுதியில் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் விளக்கம்

அரவக்குறிச்சி தொகுதியில் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அரவக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுப்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீஹரி பிரதாப் சாஹி, தேர்தல் செலவின பார்வையாளர் பதானே சச்சின் குளாப்ரோ, மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சித் தலைவருமான அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தேர்தல் செலவுக் கணக்குகளை பராமரிக்கும் முறை குறித்தும், தேர்தல் தொடர்பான புகார்கள் அளித்தல் மற்றும் பிரச்சாரம் செய்யும் இடங்களுக்கு செயலி மூலம் அனுமதி பெறுவதை வேட்பாளர்களுக்கும், அவர்களின் முகவர்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டது.

Exit mobile version