பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா என எதிர்பார்ப்பு !

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.

சபரிமலைக்கு பக்தர்கள் செல்லும் முக்கிய சாலை வழியான நிலக்கல்லில், பெண்கள், பெண் பத்திரிகையாளர் நேற்று தடுத்து நிறுத்தப்பபட்டனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவு உறுதியாக அமல்படுத்தப்படும் என்று கேரள அரசு தெரிவித்து இருப்பதால், பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்தநிலையில், கோயில் நடை இன்றுமாலை திறக்கப்படுவதால், நாளை முதல் பெண்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று இருப்பதால் கேரளாவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.சபரிமலைக்கு கூடுதல் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version