கூடுவாஞ்சேரியில் தனியார் பள்ளியில் ரோபோ 3.0 என்ற தலைப்பில் கண்காட்சி

கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ரோபோ 3.0 என்ற தலைப்பில், மாணவர்களுக்கான ரோபோ கண்காட்சி மற்றும் போட்டி நடத்தப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர். விவசாயம் செய்யும் ரோபோ, வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் ரோபோ, ஏரியின் நீர்மட்ட அளவை எச்சரிக்கும் ரோபோ, தானியங்கி சுங்க வசூல் சாதனம், உயிர் பாதுகாப்பு கார், தெருக்களில் மின்சார வயர் அறுந்து கிடந்தால் மின்சாரத்தை துண்டித்து எச்சரிக்கும் ரோபோ உள்ளிட்டவை பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்றன. மாணவர்களது திறனை வெளிப்படுத்தும் விதத்தில் இந்த கண்காட்சி அமைந்துள்ளதாக பள்ளி நிறுவனர் கூறினார்.

Exit mobile version