உண்மையை உணர்ந்து அதிமுகவுக்கு திரும்பி வரும் நிர்வாகிகள் : எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் உண்மையை உணர்ந்து திரும்பி வருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் மணி கண்டன், அரவக்குறிச்சி செயலாளர் செந்தில்குமார் உள்பட 15 வார்டு செயலாளர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்டோர், மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்னிலையில் நடந்த இந்நிகழ்வு, கரூரில் அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதனைதொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், உண்மையான கட்சி, சின்னம், கொடி எங்கு உள்ளது என்பதை அறிந்து, பிரிந்து சென்ற நிர்வாகிகள் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளதாக கூறினார்.

Exit mobile version