மின்கம்பி அறுந்து விரைவு ரயில் மீது விழுந்ததால் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மின் கம்பி அறுந்து சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் மீது விழுந்ததில், நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

சென்னை எழும்பூரில் இருந்து வழக்கம் போல் சிலம்பு விரைவு ரயில் நேற்று இரவு 8:40 மணிக்கு செங்கோட்டைக்கு புறப்பட்டு சென்றது. இன்று காலை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வந்து கொண்டிருந்தபோது, தொட்டியங்குளம் என்ற பகுதியில் மின் கம்பி அறுந்து ரயில் மீது விழுந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த இன்ஜின் ஓட்டுநர் ரயிலை நிறுத்தி, அருப்புக்கோட்டை ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், ரயில் பெட்டிக்குள் இருந்த ஆயிரக் கணக்கான ரயில் பயணிகள் உயிர் தப்பினர்.

அறுந்து கிடந்த மின் கம்பிகள் அப்புறப்படுத்தப்பட்டதை அடுத்து ரயில் 2 மணி நேரம் கால தாமதமாக புறப்பட்டு சென்றது.

Exit mobile version