கொந்தகையில் 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் தீவிரம்!

சிவகங்கை மாவட்டம் கொந்தகை பகுதியில், ஏழாம் கட்ட ஆய்வுப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விரைவில் காணொலி மூலம் துவக்கி வைக்க உள்ளார்.

தமிழகத் தொல்லியல் துறை சார்பாக, ஏற்கனவே ஆறு கட்ட ஆய்வுப் பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது 7 ஆம் கட்ட அகழாய்வு பணிகளை துவக்குவதற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து, கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய பகுதிகளில், ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில், கொந்தகையில் ஆறாம் கட்ட ஆய்வு பணிகளுக்கு மிக அருகில் உள்ள இடத்தில், ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக, சுத்தப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து 7ம் கட்ட அகழாய்வுப் பணிகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாக துவக்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Exit mobile version