முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்களின் சகோதரி உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார்.. எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!

முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்களின் சகோதரி திருமதி நாகரத்தினம் அவர்கள் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தியுள்ளார். அவருக்கு கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதன் சாராம்சம் பின்வருமாறு உள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும்,நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சர் திரு.பி.தங்கமணி,M.L.A., அவர்களுடைய மூத்த சகோதரி திருமதி L. நாகரத்தினம் அவர்கள் உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். சகோதரியை இழந்து துயரத்தில் இருக்கும் அன்புச் சகோதரர் திரு. தங்கமணி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும்,எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன்,திருமதி நாகரத்தினம் அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Exit mobile version