கட்டில் ,நாற்காலிகளுடன் தடுப்பூசி முகாமிற்கு வந்த ஈரோடு பொதுமக்கள்…..

ஈரோட்டில் இன்று காலை 8 மணிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முகாமிற்கு முன்பாக இரவே வந்து விடியும் வரை பொதுமக்கள் நாற்காலி போட்டு காத்திருந்தனர்.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், இன்று காலை 8 மணிக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. இதனையடுத்து, சூரம்பட்டியில் உள்ள தடுப்பூசி முகாமிற்கு இரவே வந்த பொதுமக்கள்,  நாற்காலி மற்றும் கட்டில் போட்டு காத்திருக்கின்றனர்.

சிலர் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால், முகாமிற்கு செல்லும் மக்கள் தினந்தோறும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இந்த நிலையில், காலையில் தடுப்பூசி போட இரவே முகாமிற்கு வந்து விடிய விடிய பொதுமக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

மேற்கண்ட செய்தியின் முழுவிபரத்தை எமது செய்தியாளர் வழங்கும் முழு விவரங்களுடன் காண கீழே உள்ள YOUTUBE-பிரிவில் உள்நுழையுங்கள்…

??⤵⤵↕↕⬇⬇⏬⏬????⤵⤵↕↕⬇⬇⏬⏬????⤵⤵↕↕⬇⬇⏬⏬??

Exit mobile version