களைகட்டிய ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் – அதிமுகவிற்கு பெருகும் பொதுமக்கள் ஆதரவு!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பரபரப்பான நிலையினை எட்டியுள்ளது. இந்த மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதிமுக சார்பாக போட்டியிடும், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் நம்பிக்கைக்குரிய வேட்பாளரனா கே.எஸ். தென்னரசு வாக்கு சேகரிக்கும் பணியை இன்றுத் தொடங்கியுள்ளார். முன்னதாக அவர் வீடு வீடாக சென்று பொதுமக்களின் வாக்குகளை சேகரிக்கத் தொடங்கியிருக்கிறார். அவருக்கு ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பொதுமக்கள் அவருக்கு ஆராத்தி எடுத்து வரவேற்று வருகின்றனர். அவரை ஆதரித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்களும் களத்தில் இறங்கியுள்ளார்.YouTube video player

Exit mobile version