ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வேட்புமனு தாக்கல்!

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தற்போது வேட்புமனுதாக்கல் செய்துள்ளார். பொதுக்குழுவினரின் தேர்வுபடியும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடியும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டிருந்தார். அதன்படி இன்று காலையில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் நம்பிக்கைக்குரியவராக விளங்கும் கே.எஸ்.தென்னரசு அவர்கள் இந்த இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றிபெறுவார் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. ஏற்கனவே புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா அவர்களின் தலைமையின் கீழ் 2016ஆம் ஆண்டு இதே தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றவர் கே.எஸ்.தென்னரசு. இந்தத் தேர்தலில் மக்களின் ஆதரவும் இவருக்கு அதிகமாக உள்ளது.
YouTube video player

Exit mobile version