ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – தோல்வி பயத்தில் திமுகவினர் சதி வேலை!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலினை முன்னிட்டு இன்று அதிமுக சார்பாக அறிமுகக் கூட்டம் நடைபெற உள்ளது. அதனை தடுக்கும் விதமாகவும், பொதுமக்களை திசைமாற்றும் விதமாகவும் பணமும் பிரியாணியும் கொடுத்து தடுத்துள்ளனர் ஈரோடு திமுகவினர்.  ஆளும் அரசான திமுக முதலில் இருந்தே ஈரோடு கிழக்குத் தொகுதியில் விதிமீறல்களை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது இன்று கருங்கல்பாளையம் கக்கன் நகரில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பொதுமக்களை அழைத்து வந்து ஆயிரம் ரூபாய் பணமும் பிரியாணியும் போட்டு வருகின்றனர். இன்று மாலை அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசின் அறிமுகக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் தோல்வி பயத்தில் திமுகவினர் இதுபோலான சதிவேலையில் ஈடுபட்டு வருகிறது.

இச்செய்தியினை விரிவாக அறிவதற்கு கீழுள்ள காணொளியைச் சொடுக்கவும்!

Exit mobile version