ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி மக்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக கே.என்.நேரு பேச்சு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி மக்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் அமைச்சர் கேஎன்.நேரு பேசிக்கொள்ளும் அதிர்ச்சி தரும் வீடியோ வெளியாகியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு 500 ரூபாய் பணம் மற்றும் பிளாட்டினம் மஹாலில், அனைத்து மாவட்ட தலைவர்களையும் அழைத்து பணம் கொடுப்பதை, வரும் 1-ம் தேதிக்குள் கொடுத்துவிடலாம் என, தேர்தல் பணிமனை கூட்டத்தில் அமைச்சர் கேஎன் நேருவும், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் பேசும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

மேலும், முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு வாட்ச் மற்றும் பிரியாணி தரப்போகிறார் எனவும், அமைச்சர் செந்தில்பாலாஜி கொடுத்துவிட்டார் என குறிப்பிட்டு பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. தேர்தலில் பணம் கொடுத்து, அதிகாரிகளை விலைக்கு வாங்கி தான், விடியா திமுக அரசு வெற்றி பெற நினைக்கிறது என்பதை, இந்த வீடியோ காட்சிகள் மக்களுக்கு அம்பலமாக்கியுள்ளது.

Exit mobile version