எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர்த்தூவி மரியாதை

எம்.ஜி.ஆரின் 31-வது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 31-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகளும் மற்றும் தொண்டர்கள் மலர்த்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இதையொட்டி மெரினாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் உறுதிமொழி ஏற்றனர். இதையடுத்து, மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Exit mobile version