மூத்த மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

பாகிஸ்தான் தீவிரவாதிகளின் நிலை மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதில் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

Exit mobile version