கோவை அருகே வாயில் காயமடைந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது!!

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே, வாயில் காயத்துடன், சாப்பிட முடியாமல் தவித்து வந்த 12 வயது யானை, இன்று காலை உயிரிழந்தது.

கோவை மாவட்டம் ஜம்பு கண்டியிலுள்ள தோட்டம் ஒன்றில், வாயில் காயத்துடன் ஆண் யானை ஒன்று நிற்பதாக, இரண்டு நாட்களுக்கு முன் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வனசரகர் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர், மருத்துவர்களை வரவழைத்து, 2 நாட்களாக பழங்களினுள் மருந்துகள் வைத்து, காயமடைந்த யானைக்கு கொடுத்தனர். தீவிர சிகிச்சைக்கு பின்னர் நேற்று காலை உடலில் முன்னேற்றம் காணப்பட்ட நிலையில், காலை 9 மணிக்கு மேல் சோர்வடைந்து காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஊசி மூலம் உடலினுள் மருந்து செலுத்தப்பட்டு, 25 பாட்டில்கள் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தது.

Exit mobile version